Posts

சிறுகதை ஆசிரியர்கள்

  சிறுகதை ஆசிரியர்கள் புதுமைப்பித்தன் §   புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளை எழுதிய இவரது இயற்பெயர், சொ.விருத்தாசலம். §   புத்தம்புதிய வடிவங்களையும் இலக்கிய உத்திகளையும் கையாண்டு புரட்சி நடையில் கதை எழுதியவர் புதுமைப்பித்தன். §   கேலியும் கிண்டலும் நிறைந்த திருநெல்வேலி மாவட்டத்துத் தமிழ்வளமும் கூடிய இவரது கதைகள் பொருளற்ற சமூகக் கட்டுப்பாடுகளையும், மூட நம்பிக்கைகளையும் கேள்விக்கு உட்படுத்துவதாக அமைந்திருக்கும். §   வறுமையின் பின்னணியில் ஏற்படும் அவலங்களை மையமாகக் கொண்டு துன்பக்கேணி, பொன்னகரம் முதலான கதைகளை இவர் படைத்துள்ளார். §   கடவுளையும் மனிதனையும் கதாபாத்திரங்களாகக் கொண்டு படைக்கப்பட்ட கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் கதையில் மனிதனின் விதியை அவன் படைத்த கடவுளாலும் மாற்றமுடியாது என்ற உண்மையைக் கூறியுள்ளார். §   உலகச் சிறுகதை எழுத்தாளர்களோடு ஒப்ப வைத்து புகழ்வதற்குத் தகுதியுடைய இவர் உலகச் சிறுகதைகளை மொழிபெயர்த்து, உலகத்துச் சிறுகதைகள், தெய்வம் கொடுத்த வரம் என்ற தலைப்புகளில் வெளியிட்டார். §   மணிக்கொடி எழுத்தாளர்களில் குறிப...

புதுக்கவிதை ஆசிரியர்கள் (எம்.ஏ. பாடத்திட்டம்)

                                  புதுக்கவிதை ஆசிரியர்கள் 1. ந . பிச்சமூர்த்தி §   இயற்பெயர் , வேங்கட மகாலிங்கம் §   கும்பகோணத்தைச் சேர்ந்தவர் §   புதுக்கவிதையின் தந்தை என்று இவர் அழைக்கப்படுகிறார் . படைப்புகள் §   காட்டு வாத்து §   வழித்துணை §   கோடை வயல் §   இராமானுஜர் திரைப்படத்தில் ‘ ஆளவந்தான் ’ என்ற வேடத்தில் நடித்துள்ளார் . 2. பிரமிள் §   இலங்கையைச் சார்ந்த கவிஞர் §   இயற்பெயர் தருமு சிவராமு §   பானு சந்திரன் , அரூப் சிவராம் போன்ற புனைபெயர்களில் எழுதியுள்ளார் . கவிதை நூல்கள் §   கண்ணாடியுள்ளிருந்து §   கைப்பிடி அளவு கடல் §   மேல் நோக்கிய பயணம் 3. ஞானக்கூத்தன் §   இயற்பெயர் : ரங்கநாதன் §   நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர் §   கசடதபற , கவனம் போன்ற சிற்றிதழ்களை நடத்தியுள்ளார் ...